சென்னை: மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற சிறப்புமிக்க தீர்ப்பினை உச்சநீதிமன்றம் அளித்துள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்துடனும், அரசியல் சட்டத்துடனும் விபரீத விளையாட்டு நடத்தும் பாஜக அரசு இனியாவது திருந்த வேண்டும் என்று தெரிவித்தார்.